Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டிரம்ப் வருகையை எதிர்த்து கோலாலம்பூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த பாஸ் திட்டம்
தற்போதைய செய்திகள்

டிரம்ப் வருகையை எதிர்த்து கோலாலம்பூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த பாஸ் திட்டம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

மலேசியா விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அழைப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் 47ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூருக்கு வருகை புரியவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகையை எதிர்த்து, தலைநகரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பாஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

டிரம்பின் வருகைக்கு முன்னதாகவே விரைவில் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை நடைபெறும் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

அந்த வல்லரசு நாட்டின் தலைவரால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் கட்டவிழ்க்கப்பட்ட அட்டுழீயங்களை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக டிரம்பின் வருகையை பாஸ் கட்சி, முழு வீச்சாக எதிர்க்கவிருக்கிறது என்று தக்கியுடின் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஸ் கட்சி மட்டுமின்றி மனித அடக்குமுறையை எதித்து, அமைதியை நேசிக்கும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இயக்கங்களும் பங்கு கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்