May 24, 2026
Thisaigal NewsYouTube
GISBH விவகாரம் தொடர்பாக மலாக்காவில் நேற்று கைது
தற்போதைய செய்திகள்

GISBH விவகாரம் தொடர்பாக மலாக்காவில் நேற்று கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 22-

GISBH விவகாரம் தொடர்பாக மலாக்காவில் நேற்று கைது செய்யப்பட்ட அல்-அர்காம் நிறுவனர் அஷாரி முஹம்மதுவின் மூன்று மகன்களுக்கு, மலாக்கா இஸ்லாமிய மதத் துறையான ஜெய்ம் மின் ஜாமீன் மனுவை ஷரியா உயர் நீதிமன்றம் இன்று அனுமதித்தது.

38, 42, மற்றும் 45 வயதுடைய மூவருக்கும் தலா 1,000 ஜாமீன் மற்று. ஒரு நபர் உத்தரவாதத்துடன் செலுத்துமாறு ஷரியா உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் யூனுஸ் முகமட் சின் உத்தரவிட்டார்.

இஸ்லாத்தை அவமதித்ததற்காக 1991 ஆம் ஆண்டு ஷரியா குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 63 இன் கீழ் விசாரணையை முடிக்க ஜெய்ம் சமர்ப்பித்த விண்ணப்பத்தை அனுமதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த பிரிவின் கீழ், குற்றவாளிகள் 5,000 அபராதம் அல்லது 36 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்!

Related News