மஞ்சுங், மே 11-
பேரா, மஞ்சுங்-கில் செயல்பட்டு வரும் Karaoke கேளிக்கை மையங்களில் மாநில குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் வாடிக்கையாளர் உபசரணைப் பெண்கள் என்று நம்பப்படும் 29 வியட்நாமியப் பெண்கள் உட்பட 39 அந்நிய நாட்டவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கி, விடியற்காலை 2 மணி வரை நடைபெற்ற OP GEGAR என்ற இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 82 தனிநபர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக பேரா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் மியோர் ஹெஸ்புல்லாஹ் மியோர் அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.
25 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய 39 வெளிநாட்டுப் பெண்கள், வியட்நாம், மியன்மார், இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா முதலிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார் என்று மியோர் ஹெஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.








