நேபாளிலும் திபெத்திலும் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட 77 மலேசியர்களும், மலேசியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் நேபாள தலைநகர் காட்மண்டுவுக்கு அழைத்துவரப்படுகின்றனர்.
அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளையில், மேலும் 55 மலேசியர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஃபஹ்மி, இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட ஹசான் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே, நேபாளில் நடைபெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில், இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 4,500 பேர் காணாமல் போயுள்ளனர்.








