திரெங்கானு, நவ.28-
திரெங்கானுவில் வெள்ளத்தினால் முதலாவது மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெசுட், கம்போங் பினாங்கில் 66 வயது Tuan Jusoh Tuan Hassan நீரில் மூழ்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.
தமது மூன்று நண்பர்களுடன் வயலுக்கு செல்வதாக கூறி, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. வெள்ள நீர் கரைபுரண்டோடிக்கொண்டிக்கும் வேளையில் மீன் பிடிக்கும் போது அவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவரின் உடல் இன்று காலை 10.10 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.








