பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 5 இல் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தின் கட்டட வளாகம் தீப்பற்றிக்கொண்டதில் ஒருவர் கருகி மாண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்தது. அந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 14 பேர், பராமரிப்பாளரால் காப்பாற்றப்பட்ட வேளையில் ஒருவர் படுக்கை கட்டிலில் கருகி மாண்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில மீட்புப்படையின் இயக்குநர் வான் முஹமாட் ரசால் வான் தெரிவித்தார். தகவல் கிடைத்து இரண்டு தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பெட்டாலிங் ஜெயா நிலையத்தின் 14 வீரர்கள், அ பிரிவு தரத்திலான அந்த கட்டடத்தில் சூழ்ந்த தீயை சுமார் 20 நிமிடத்தில் அணைத்தர்.
30 விழுக்காடு அழிந்து விட்ட அந்த மையத்தை முழுமையாக சோதனை செய்த போது 69 வயது மாது, கட்டிலின் இடுக்குப்பகுதியில் கருகி கிடந்த தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


