பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 5 இல் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தின் கட்டட வளாகம் தீப்பற்றிக்கொண்டதில் ஒருவர் கருகி மாண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்தது. அந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 14 பேர், பராமரிப்பாளரால் காப்பாற்றப்பட்ட வேளையில் ஒருவர் படுக்கை கட்டிலில் கருகி மாண்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில மீட்புப்படையின் இயக்குநர் வான் முஹமாட் ரசால் வான் தெரிவித்தார். தகவல் கிடைத்து இரண்டு தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பெட்டாலிங் ஜெயா நிலையத்தின் 14 வீரர்கள், அ பிரிவு தரத்திலான அந்த கட்டடத்தில் சூழ்ந்த தீயை சுமார் 20 நிமிடத்தில் அணைத்தர்.
30 விழுக்காடு அழிந்து விட்ட அந்த மையத்தை முழுமையாக சோதனை செய்த போது 69 வயது மாது, கட்டிலின் இடுக்குப்பகுதியில் கருகி கிடந்த தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


