பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 5 இல் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தின் கட்டட வளாகம் தீப்பற்றிக்கொண்டதில் ஒருவர் கருகி மாண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்தது. அந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 14 பேர், பராமரிப்பாளரால் காப்பாற்றப்பட்ட வேளையில் ஒருவர் படுக்கை கட்டிலில் கருகி மாண்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில மீட்புப்படையின் இயக்குநர் வான் முஹமாட் ரசால் வான் தெரிவித்தார். தகவல் கிடைத்து இரண்டு தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பெட்டாலிங் ஜெயா நிலையத்தின் 14 வீரர்கள், அ பிரிவு தரத்திலான அந்த கட்டடத்தில் சூழ்ந்த தீயை சுமார் 20 நிமிடத்தில் அணைத்தர்.
30 விழுக்காடு அழிந்து விட்ட அந்த மையத்தை முழுமையாக சோதனை செய்த போது 69 வயது மாது, கட்டிலின் இடுக்குப்பகுதியில் கருகி கிடந்த தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


