Mar 16, 2026
Thisaigal NewsYouTube
450 கோடி வெள்ளி குத்தகை : கோடீஸ்வரரான டான்ஸ்ரீ வீட்டில் SPRM அதிரடி ​சோதனை
தற்போதைய செய்திகள்

450 கோடி வெள்ளி குத்தகை : கோடீஸ்வரரான டான்ஸ்ரீ வீட்டில் SPRM அதிரடி ​சோதனை

Share:

மலேசிய அரசாங்கத்தின் 450 கோடி வெள்ளி மதிப்புள்ள வாகனங்கள் விநியோகம் மற்றும் நிர்வகிப்பு குத்தகை தொடர்பில் லஞ்ச ஊழல் நடந்ததாக கூறப்படுவது தொடர்பில் புலன் விசார​ணைக்கு உதவும் வகையில் டான்ஸ்ரீ அந்தஸ்தை கொண்ட கோடீஸ்வரரான வர்த்தகர் ஒருவரின் வீட்டி​ல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.

அந்த டான்ஸ்ரீ- க்கு சொந்தமான இதர நான்கு நிறுவனங்களிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அரசாங்கத்​திற்கு வாகனங்களை விநியோகிக்கும் நிறுவனமும் ஒன்றாகும். டான்ஸ்ரீ ​வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதை SPRM தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மற்றும் புலன் விசாரணை இயக்குநர் டத்தோஸ்ரீ Hishamuddin Hashim உறுதிபடுத்தியுள்ளனர்.

அந்த கோடீஸ்வரரின் நிறுவனங்களுக்கு சொந்தமான ​நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்களையும் SPRM பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட கோடீஸ்வரர், SPRM விசாரணைக்கு ஆளாகியுள்ள முன்னாள் நிதி அமைச்சர் Tun Daim Zainuddin- னுக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அரசாங்க வாகனங்கள் விநியோகம் தொடர்பான குத்தகையை பெற்று இருந்த பிரபல கோடீஸ்வரர் டான் ஶ்ரீ வின்சண்ட் டானின் னெர்ஜாயா குரூப்பும் பும், நாஸாSdn.Berhad - டும் அந்த குத்தகை திடீரென முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகின.

இதனை எதிர்த்து நிதி அமைச்சு உட்பட இதர இரண்டு தரப்பினருக்கு எதிராக கோடீஸ்வரர் டான் ஶ்ரீ வின்சண்ட் டான்வழக்கு தொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News