கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூரின் பகிரங்க மன்னிப்பை ஏற்றுக்கொண்ட அமானா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ மாஃபூஸ் ஒமார் , மறுபடியும் அவமானத்திற்கு ஆளாக வேண்டாம் என்று அந்த பாஸ் கட்சித் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக மாஃபூஸ் ஒமாருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடா மந்திரி புசார் சனூசிக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சனூசியின் இழப்பீட்டுத் தொகையையும், மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வதாக மாஃபூஸ் ஒமார் இன்று அறிவித்துள்ளார். அதேவேளையில் ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து, இனியாவது தன்னை திருத்திக்கொண்டு, கண்ணியத்துடன் நடந்து கொள்ளமாறு கெடா மந்திரி புசாருக்கு அறிவுறுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


