கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூரின் பகிரங்க மன்னிப்பை ஏற்றுக்கொண்ட அமானா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ மாஃபூஸ் ஒமார் , மறுபடியும் அவமானத்திற்கு ஆளாக வேண்டாம் என்று அந்த பாஸ் கட்சித் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக மாஃபூஸ் ஒமாருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடா மந்திரி புசார் சனூசிக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சனூசியின் இழப்பீட்டுத் தொகையையும், மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வதாக மாஃபூஸ் ஒமார் இன்று அறிவித்துள்ளார். அதேவேளையில் ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து, இனியாவது தன்னை திருத்திக்கொண்டு, கண்ணியத்துடன் நடந்து கொள்ளமாறு கெடா மந்திரி புசாருக்கு அறிவுறுத்தினார்.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்


