கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூரின் பகிரங்க மன்னிப்பை ஏற்றுக்கொண்ட அமானா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ மாஃபூஸ் ஒமார் , மறுபடியும் அவமானத்திற்கு ஆளாக வேண்டாம் என்று அந்த பாஸ் கட்சித் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக மாஃபூஸ் ஒமாருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதுடன் அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடா மந்திரி புசார் சனூசிக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சனூசியின் இழப்பீட்டுத் தொகையையும், மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வதாக மாஃபூஸ் ஒமார் இன்று அறிவித்துள்ளார். அதேவேளையில் ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து, இனியாவது தன்னை திருத்திக்கொண்டு, கண்ணியத்துடன் நடந்து கொள்ளமாறு கெடா மந்திரி புசாருக்கு அறிவுறுத்தினார்.

Related News

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்


