Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நீலாய் தொழிற்சாலையில் 184 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!
தற்போதைய செய்திகள்

நீலாய் தொழிற்சாலையில் 184 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

Share:

சிரம்பான், நவம்பர்.06-

நீலாயில் உள்ள ஒரு பேட்டரி தொழிற்சாலையில், நேற்று புதன்கிழமை குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகப் பணியாற்றிய 184 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 20 முதல் 49 வயதுக்குட்பட்ட வங்கதேசம், மியன்மார், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 163 ஆண்களும், 21 பெண்களும் அடங்குவர் என்று நெகிரி செம்பிலான் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் கென்னித் டான் ஐ கியாங் தெரிவித்தார்.

நேற்று காலை 7.50 மணிக்குத் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையின் போது, பலர் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதாகவும் கென்னித் டான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, லெங்கேங் குடிநுழைவு அலுவலகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்