Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வலுவான அஸ்திவாரத்தை கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வலுவான அஸ்திவாரத்தை கொண்டுள்ளது

Share:

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவான அஸ்திவாரத்தை கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை பிரதமர் மறுத்தார்.

அதேவேளையில் தமது தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார்.

புத்ராஜெயாவின் கூரைகள், காண்கிரேட் தன்மையிலானதாகும். அதில்
ஓட்டை, ஒடிசல் எதுவும் இல்லை.. வலிமையாக உள்ளது. கூரைகளை தகர்க்கும் முயற்சிகளை தவிர்க்க ஒரே அரசாங்கம், ஒரே கட்டமைப்பை நிறுவியுள்ளோம் என்று புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஓராண்டுகால ஆட்சி நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News