May 23, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களின் பிரச்சனைகளை அமானா கட்சி முன்னெடுக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்களின் பிரச்சனைகளை அமானா கட்சி முன்னெடுக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 10-

மலாய்க்காரர்களின் உரிமைகளுக்காகவும் பிரச்சனைகளுக்காகவும் போராடுகின்ற கட்சியாக, அமானா கட்சி அதனை உருமாற்றிக் கொள்ள வேண்டும்.

பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில், மலாய்க்காரர்கள் - இஸ்லாமியர்கள் அடிப்படையிலான தொகுதிகள், பெரும்பாலும் அமானா கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளதால், அக்கட்சி அந்த கடப்பாட்டைக் கொள்வது அவசியம் என மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மோஹட் யுஸ்ரி இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நடப்பில், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற்று தரும் கடப்பாட்டை,பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, அம்னோவுக்கு வழங்கியுள்ளது.

முன்னாள் பேரரசரின் உத்தரவின் கீழ் மட்டுமே, ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ இணைந்துள்ளதால், அக்கட்சி உடனான ஒத்துழைப்பு தற்காலிகமானது என்பதை பக்காத்தான் ஹாராப்பான் புரிந்துக்கொள்ள வேண்டுமெனவும் யுஸ்ரி நினைவுறுத்தினார்.

Related News