May 6, 2026
Thisaigal NewsYouTube
செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைக்குட்பட்டு இருப்பது உறுதிச் செய்யப்படும் - இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதி
தற்போதைய செய்திகள்

செயற்கை நுண்ணறிவின் நெறிமுறைக்குட்பட்டு இருப்பது உறுதிச் செய்யப்படும் - இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதி

Share:

கோலாலம்பூர், நவம்பர்.24-

மக்களிடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயற்கை நுண்ணறிவு தவறானப் பயன்பாடுகளை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாகவும், அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று நாடாளுமன்றத்தில் பதிவுச் செய்தார்.

சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, குறிப்பாக பொதுத் தேர்தல் காலத்திற்கு முன்னதாக, மக்களைக் குழப்புவதோடு, சமுதாய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI-யைத் தவறாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது என்று அமைச்சர் கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

இந்தத் தவறான செயல்பாடுகளை எதிர்கொள்ளவும், இது போன்ற சிக்கல்களைச் சமாளிக்கவும், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சட்டம், உள்ளடக்கக் கண்காணிப்பு மற்றும் இது தொடர்பான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அணுகுமுறையை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தவிர செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பான சிறப்புச் சட்ட மசோதாவை இலக்கவியல் அமைச்சு திட்டமிடும் வேளையில், செயற்கை நுண்ணறிவு அரசியலமைப்புச் சட்டத்தை இயக்கவும், செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் உள்படுத்திய வரைவுச் சட்டங்களை செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும் சிறப்புச் செயற்குழுவை இலக்கவியல் அமைச்சு உருவாக்கியுள்ளது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்