May 26, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் மாநில தீயணைப்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்
தற்போதைய செய்திகள்

சரவாக் மாநில தீயணைப்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்

Share:

டிச.6-

சரவாக் கூச்சிங் நகரில் உள்ள Jalan Matangஇல் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரம் கோழிகள் எரிந்து சாம்பலாகின என சரவாக் மாநில தீயணைப்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாலை 3.43 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. Petra Jaya, Batu Lintang தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். ஏனெனில் அந்த இடத்தில் தீயணைப்பு நீர் தெளிப்பான் இல்லை. அருகில் உள்ள ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து தீயை அணைக்க வேண்டியிருந்ததாக அவர் மேலும் சொன்னார்.

இந்தத் தீ விபத்தில் கோழிப்பண்ணை உரிமையாளருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகளுடன், கோழிப்பண்ணையும் முற்றிலும் அழிந்துவிட்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த தீ விபத்தில் வேறு யாரும் காயமடையவில்லை எனவும் . கோழிகள் மட்டுமே இறந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு