Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ அருகே மனைவியைக் கொன்றதாகச் சந்தேகத்தின் பேரில் மியன்மார் பிரஜை கைது!
தற்போதைய செய்திகள்

ஈப்போ அருகே மனைவியைக் கொன்றதாகச் சந்தேகத்தின் பேரில் மியன்மார் பிரஜை கைது!

Share:

ஈப்போ, செப்டம்பர்.30-

ஈப்போ, செம்மோர் அருகேயுள்ள கம்போங் கோல குவாங் என்ற பகுதியிலுள்ள வீடு ஒன்றில், இறந்த நிலையில் காணப்பட்ட பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

நேற்று திங்கட்கிழமை மதியம் 12.30 மணியளவில், மியன்மார் நாட்டவர் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு வந்ததையடுத்து உடனடியாக அங்கு விரைந்த போலீசார் அப்பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால், அவரது கணவர் என நம்பப்படும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக அப்பெண்ணின் சடலம் தற்போது ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு