Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கும் பெண்ணுக்கும் சிறை
தற்போதைய செய்திகள்

ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநருக்கும் பெண்ணுக்கும் சிறை

Share:

விரைவுப் பேருந்தை ஓட்டியபோது பெண் ஒருவரைத் தனது மடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநருக்கும் அந்தப் பெண்ணுக்கும் மலாக்கா, ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை விதித்தது.

36 வயது பேருந்து ஓட்டுநரான அரிஃப் ஃபஹ்மி என்பவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், அவரது மடியில் அமர்ந்து பயணம் செய்த 21 வயது நூர் அடிலா நஜ்வா என்ற பெண்ணுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிப்பதாக மாஜிஸ்திரேட்மசனான் சினின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மலாக்கா, பெம்பான் அருகில் அவ்விருவரும் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறைத் தண்னைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பேருந்து ஓட்டுநர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, பேருந்துப் பயணி ஒருவரை ஆபாசமாகத் திட்டியதற்காக நூர் அடிலாவிற்கு மேலும் 100 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related News

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!