Jan 22, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் டத்தோ மாலிக்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் டத்தோ மாலிக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

Share:

திரைப்பட வெளியீடு மற்றும் இந்திய நாட்டு நடிகர், நடிகைகளை மலேசியாவிற்கு அழைத்து வந்த கலைநிகழ்ச்சிகளை படைப்பது போன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரபல தொழில் அதிபர் டத்தோ மாலிக் தஸ்திகீர் இன்று புதன்கிழமை மாலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்ட டத்தோ மாலிக், புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் ஒரு நாள் தடுத்து வைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சென்டிரியன் பெர்ஹாட், மாலிக் மஜு சென்டிரியன் பெர்ஹாட் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரான 42 வயது டத்தோ மாலிக், சட்டவிரோதப் பண மாற்றம் பயங்கரவாத நிதி அளிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் ஆகியவற்றை தடுக்கும் 2001 ஆம் ஆண்டு அம்லா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி

எஸ்.பி.ஆர்.எம் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் டத்தோ மாலிக... | Thisaigal News