May 18, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் நிகழ்ந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: குண்டர் கும்பல்கள் சம்பந்தப்பட்டதாகும்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் நிகழ்ந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: குண்டர் கும்பல்கள் சம்பந்தப்பட்டதாகும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.19-

கோலாலம்பூரில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரிக்பீல்ட்ஸிலும், திங்கட்கிழமை செராஸிலும் நிகழ்ந்த இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், குண்டர் கும்பல்கள் சம்பந்தப்பட்டதாகும் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளா? இல்லையா? என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் யுசுஃப் ஜான் முகமட் தெரிவித்தார்.

இவ்விரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வரும் வேளையில் சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிக்பீல்ட்ஸில் உள்ள முன்னணி உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

செராஸ், ஜாலான் லோக் யுவில் உள்ள பேரங்காடியின் முன்புறம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

இவ்விரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளன.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை