May 6, 2026
Thisaigal NewsYouTube
சக மாணவரை வெட்டுக் கத்தியால் மிரட்டிய மாணவர் கைது
தற்போதைய செய்திகள்

சக மாணவரை வெட்டுக் கத்தியால் மிரட்டிய மாணவர் கைது

Share:

கோம்பாக், டிசம்பர்.11-

சிலாங்கூர் கோம்பாக் மாவட்டத்தில் சக மாணவரிடம் பணம் கேட்டு, வெட்டுக் கத்தியால் மிரட்டியதாகக் கூறப்படும் ஓர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் படிவ மாணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிஃபின் முகமட் நாசீர் தெரிவித்தார்.

15 வயதுடைய அந்த மாணவர், தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு குற்றவியல் சட்டம் 506 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சக மாணவரிடம் பணம் கேட்டு, வெட்டுக் கத்தியைக் கொண்டு அந்த மாணவர் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்