May 27, 2026
Thisaigal NewsYouTube
புஸ்பாக்கோமிற்கு கையூட்டு, ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

புஸ்பாக்கோமிற்கு கையூட்டு, ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், ஜன.4-


கனரக வாகன சோதனைக்கு புஸ்பாகோமிற்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் ஜோனி டான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபரை வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்ற ஆணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளது.

கனரக வாகன சோதனையின் போது அந்த நபர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார். பின்னர் அந்த நபர் சாலை போக்குவரத்து இலாகாவினால் தடுத்து வைக்கப்பட்டு, எஸ்.பி.ஆர்.எம். -மிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News