இன்று காலை Loyalty தீவுகளின் தென்கிழக்குப் பகுதியில் இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை ரிக்டர் அளவுக் கோலில் 6.0 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம், காலை 9.15 மணியளவில் பிஜி, நாடியின் தென்மேற்கு பகுதியிலிருந்து 913 கிலோமீட்டர் தொலைவிலும், கடற்பகுதியில் 58 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட வேளையில், இரண்டாவது நிலநடுக்கம் காலை 10.10 மணியளவில் 894 கிலோமீட்டர் தொலைவிலும், கடற்பகுதியில் 93 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், அது மலேசியாவில் சுனாமிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று மேட் மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்


