கோலாலம்பூர், மார்ச்.18-
இன்று அதிகாலையில் இந்தோனேசியா, வட சுமத்ரா கடற்பகுதியில் பலத்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக் கோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தின் தாக்கம், தீபகற்ப மலேசியாவில் பல மாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக, பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயாவில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மேட்மலேசியா தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் சிபோல்கா என்ற இடத்தில் கிழக்கே 41கிலோ மீட்டர் தொலைவில் காலை 6.22 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலைக்கொண்டிருந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.
எனினும் இது சுனாமி அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கை சமிக்ஞையை விடுக்கவில்லை என்ற அது தெரிவித்துள்ளது.








