வளர்ப்பு நாய் ‘ராக்கி’யை கொடூரமாக நடத்தியதாக அதன் உரிமையாளரான எஸ். ரோகினி தேவி மீது கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது
நீதிபதி முஜீப் சரோஜி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, ரோகினி தேவி, தான் குற்றவாளி அல்ல என்று மறுத்து விசாரணையை எதிர்கொண்டார்.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி தாமான் தெலுக் கெடுங் இண்டா, போர்ட் கிளாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு, ராக்கியின் கழுத்தில் கயிறு வளையம் இருந்த நிலையில், அதனை தேவையற்ற முறையில் இழுத்து விலங்குக்கு தேவையற்ற வலி மற்றும் துன்பத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விலங்குகள் நலச் சட்டம் 2015-ன் பிரிவு 29(1)(e)-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அபராதம், அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








