Jul 4, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு வாடகைப் பண உதவி நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு வாடகைப் பண உதவி நீட்டிப்பு

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.04-

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி எரிவாயு குழாய் வெடிப்பினால் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்த சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப் பணம் உதவியை சிலாங்கூர் மாநில அரசு மேலும் 3 மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது.

தங்களின் வீடுகளை சிலாங்கூர் மாநில அரசு சீரமைக்கும் வரையில் குடியிருப்பாளர்கள் வாடகை வீடுகளில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான மாதாந்திர வாடகையாக தலா 2 ஆயிரம் ரிங்கிட்டை சிலாங்கூர் அரசு வழங்கி வருகிறது.

இந்த வாடகைப் பண உதவி மேலும் 3 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த முறை வாடகைப் பணம் பட்டுவாடா செய்வதில் பெரிய சிக்கல் ஏதும் இருக்காது என்று மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்தார். காரணம், முதல் முறையாக அவர்கள் வாடகைப் பணம் பெறும் போதுதான், சேதமுற்ற தங்கள் குடியிருப்பு தொடர்புடைய ஆவணங்கள் கோரப்பட்டன. இப்போது அவர்கள் இயல்பாகவே பதிவில் இருப்பதால் வாடகைப் பணம் மிகச் சுலபமாக பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக அமிருடின் ஷாரி மேலும் கூறினார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்