Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் ஆதரவாளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பது
தற்போதைய செய்திகள்

நஜீப் ஆதரவாளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பது

Share:

ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆதரவாளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என்று அவரின் மகள் நூரியானா நஜ்வா தெரிவித்துள்ளார்.

ஆனால், தமது தந்தையின் ஆதரவாளர்கள் பொறுமையிழந்து வருகின்றனர் என்பதையும் நஜ்வா தெளிவுபடுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் என்ற முறையில் தமது தந்தைக்கு நீதியை நிலைநிறுத்தவதில் நடப்பு அரசாங்கத்தின் உறுதியான முயற்சிகளை அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

தமது தந்தையின் பெரும்பாலான ஆதரவாளர்கள் பாரிசான் நேஷனல் ஆதரவாளர்களாக உள்ளனர். அவர்கள் பொறுமையிழந்து வருவது போல் உள்ளது என்று நஜ்வா தெரிவித்துள்ளார்.

Related News