நாட்டில் திவால் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, வங்கிளுக்கான ஓபீஆர் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருவதே காரணமாகும் என்று கூறப்படுவதை மத்தியப் பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா கவர்னர், டான்ஶ்ரீ நூர் ஷம்சீயா முகமட் யூனோஸ் மறுத்துள்ளார்.
இப்படி ஒரு வாதத்தை உறுதிப்படுத்தும் வகையில், எந்தவொரு புள்ளிவிவரமோ அல்லது ஆதாரமோ இல்லை என்று நூர் ஷம்சீயா விளக்கினார்.
வங்கிகள் விதித்து வரும் ஓபீஆர் வட்டி விகிதத்தை பேங்க் நெகாரா அடிக்கடி உயர்த்தி வருவதன் விளைவாக, தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் திவாலாகி வருவதாக கூறப்படுவது தொடர்பில், நூர் ஷம்சீயா எதிர்வினையாற்றினார்.

Related News

சனாதன தர்மம்: தேவஸ்தானத்தின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து


