நாட்டில் திவால் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, வங்கிளுக்கான ஓபீஆர் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருவதே காரணமாகும் என்று கூறப்படுவதை மத்தியப் பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா கவர்னர், டான்ஶ்ரீ நூர் ஷம்சீயா முகமட் யூனோஸ் மறுத்துள்ளார்.
இப்படி ஒரு வாதத்தை உறுதிப்படுத்தும் வகையில், எந்தவொரு புள்ளிவிவரமோ அல்லது ஆதாரமோ இல்லை என்று நூர் ஷம்சீயா விளக்கினார்.
வங்கிகள் விதித்து வரும் ஓபீஆர் வட்டி விகிதத்தை பேங்க் நெகாரா அடிக்கடி உயர்த்தி வருவதன் விளைவாக, தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் திவாலாகி வருவதாக கூறப்படுவது தொடர்பில், நூர் ஷம்சீயா எதிர்வினையாற்றினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


