Apr 20, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் நன்னெறிக் கல்வி முடிவுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் - மூடா கட்சி வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் நன்னெறிக் கல்வி முடிவுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் - மூடா கட்சி வலியுறுத்தல்

Share:

எஸ்.பி.எம் (SPM) நன்னெறிக் கல்வி பாடத்தில் மாணவர்கள் பெறும் முடிவுகள் குறித்து நிலவும் சந்தேகங்களைத் தீர்க்க, தேர்வு வாரியம் கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என மூடா கட்சியின் தேசிய உதவித் தலைவர் டாக்டர் ஆர். சிவபிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

மற்ற பாடங்களில் சிறப்பாகச் செயல்படும் இந்திய மாணவர்கள், நன்னெறிக் கல்வியில் மட்டும் குறைந்த தரப் புள்ளிகளைப் பெறுவது அண்மைக்காலமாக கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கும் தரப்படுத்துதல் முறை தவறல்ல, ஆனால் அந்த முறை குறித்த தெளிவான விவரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாததே குழப்பத்திற்குக் காரணம் என்றார்.

அனைத்துலக தேர்வு முறைகளில் உள்ளது போல, மதிப்பெண்கள் எவ்வாறு தரங்களாக மாற்றப்படுகின்றன என்ற விவரங்களை தேர்வு வாரியம் பகிரங்கப்படுத்த வேண்டும். நன்னெறிக் கல்வி என்பது மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும், உதவித்தொகை பெறுவதையும் நேரடியாகப் பாதிக்கும் முக்கியப் பாடம் என்பதால், இதில் கூடுதல் கவனம் தேவை என ஒரு கல்விமானான டாக்டர் சிவபிரகாஷ் கூறினார்.

தேர்வு முறையின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த, தரம் பிரிக்கும் எல்லைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறித்த வெளிப்படையான கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும் என்றும் டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டார்.

Related News