Dec 3, 2025
Thisaigal NewsYouTube
செம்புப் பாலங்களைக் கொள்ளையடித்தல்: மூவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

செம்புப் பாலங்களைக் கொள்ளையடித்தல்: மூவர் மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், அக்டோபர்.07-

கடந்த மாதம் நிறுவனம் ஒன்றிலிருந்து விலை உயர்ந்த 62 செம்புப் பாலங்களைக் கொள்ளையிட்டதாக மூன்று நபர்கள், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

34 வயது ஆர். உதயகுமார், 50 வயது சி. நரேந்திரன் மற்றும் 24 வயது வி. நாவேந்திர நாயர் ஆகிய மூவரும் நீதிபதி டத்தின் சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நீலாய், ஜாலான் சிரம்பான்-புக்கிட் நெனாஸ் நெடுஞ்சாலை அருகில் ஒரு நிறுவனத்தில் 62 செம்புப் பாலங்களைக் கொள்ளையிட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட உதயகுமார் மற்றும் நரேந்திரன் லோரி ஓட்டுநர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி