வீடொன்று தீப்பிடித்துக்கொண்டதில் தப்பிக்க முற்பட்ட இரண்டு சகோதரர்கள் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் ஜோகூர், பெங்கெராங், தாமான் பாயு டாமாயில் நிகழ்ந்தது. ஒருவர் 90 விழுக்காடு தீயக்காயங்களுடனும் மற்றொருவர் 30 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிர் தப்பியதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.
50 மற்றும் 70 வயதுடைய அந்த இரு சகோதர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் தீ ஏற்பட்டதற்கான காரணங்களை தாங்கள் ஆராய்ந்து வருவதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார். முன்னதாக, அந்த இரு சகோதர்களுக்கும் சுங்காய் ரெங்கிட் சுகாதார கிளினிக்கில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


