முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் பொது மன்னிப்பு விண்ணப்பத்தை பரிசீலனை செய்வது உட்பட மன்னிப்பு வாரியம் சம்பந்தப்பட்ட விவகாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
நஜீப்பிற்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான விண்ணப்பம் குறித்து மன்னிப்பு வாரியம் அடுத்த வாரம் முடிவு செய்யவிருப்பதாக சிங்கப்பூரை தளமாக கொண்ட Channel News Asia வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் கருத்துரைக்கையில் ஃபஹ்மி ஃபட்சில் இதனை குறிப்பிட்டார்.
பொது மன்னிப்பு விவகாரம், மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது என்ற போதிலும் இறுதி முடிவு என்பது மாமன்னரின் கைகளில் உள்ளது என்று ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.








