நாட்டில் எல் நினோ வானிலை நிகழ்வு வலுப்பெற்று வருவதால், வழக்கத்தைவிட முன்கூட்டியே அதிக வெப்பமான நாட்களும், நீண்ட வறட்சிக் காலமும் ஏற்படக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரித்துள்ளது.
அக்டோபர் முதல் எல் நினோ “வலுவானது” முதல் “மிகவும் வலுவானது” வரையிலான நிலையை அடைய 81 சதவிகித வாய்ப்புள்ளதாகவும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இந்த வானிலை நிலையானது, ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த ஆண்டு தொடக்கம் வரையிலும் எல் நினோ தொடர 97 சதவிகித வாய்ப்புள்ளதாக அத்துறை குறிப்பிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான நீண்டகால வானிலை முன்னறிவிப்பின் படி, மலேசியாவின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவான மழைப்பொழிவு பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.








