Aug 17, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் பச்சிளம் குழந்தையின் இரத்தத்தில் போதைப்பொருள் – பரிசோதனையில் உறுதி
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் பச்சிளம் குழந்தையின் இரத்தத்தில் போதைப்பொருள் – பரிசோதனையில் உறுதி

Share:

கிளந்தான் மாநிலத்தில், பச்சிளம் பெண் குழந்தை ஒன்றிற்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் ஆம்பெட்டமைன்கள், பென்சோடயாசபின்கள் என்ற போதைப்பொருளானது அதன் இரத்தத்தில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்குழந்தையின் மன மற்றும் உடல் வளர்ச்சியை சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சிகிச்சைக்குப் பிறகு ஃபின்னிகன் மதிப்பீடு எனப்படும் பரிசோதனையில் குழந்தையின் மதிப்பெண் பூஜ்ஜியமாகியுள்ளது.

தாய் உட்கொண்ட அமைதிப்படுத்தும் மருந்துகளால் குழந்தைக்கு தற்காலிக மருந்து விலகல் அறிகுறிகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ராஜா பெரும்புவான் ஜைனப் இரண்டு மருத்துவமனையில் பிறந்த அக்குழந்தைக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தையின் 30 வயது தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகள் சட்டம் 2001 மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

முக்கிய சீர்திருத்த மசோதாக்களில் இனி தாமதம் வேண்டாம் / இவ்வாண்டிற்குள் நிறைவேற்ற அன்வாருக்கு ஜசெக காலக்கெடு

முக்கிய சீர்திருத்த மசோதாக்களில் இனி தாமதம் வேண்டாம் / இவ்வாண்டிற்குள் நிறைவேற்ற அன்வாருக்கு ஜசெக காலக்கெடு

பகாங்கில் 14 ஆயிரம் லஞ்சம் பெற்ற இரு போலீஸ் அதிகாரிகள் கைது

பகாங்கில் 14 ஆயிரம் லஞ்சம் பெற்ற இரு போலீஸ் அதிகாரிகள் கைது

மலேசியாவில் எல் நினோ வலுப்பெறுகிறது - வழக்கத்தை விட நீண்ட வறட்சி ஏற்படும் அபாயம்

மலேசியாவில் எல் நினோ வலுப்பெறுகிறது - வழக்கத்தை விட நீண்ட வறட்சி ஏற்படும் அபாயம்

கூட்டரசு அரசாங்க மட்டதில் பாரிசானுடனான ஒத்துழைப்பு தொடரும் - அன்வார் திட்டவட்டம்

கூட்டரசு அரசாங்க மட்டதில் பாரிசானுடனான ஒத்துழைப்பு தொடரும் - அன்வார் திட்டவட்டம்

எ.யு.கே.யு  சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான ‘தெளிவான காலக்கெடு’ வேண்டும்: மாணவர் அமைப்பு வலியுறுத்து

எ.யு.கே.யு சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான ‘தெளிவான காலக்கெடு’ வேண்டும்: மாணவர் அமைப்பு வலியுறுத்து

6 ஜோகூர் மாணவர்களுக்கு உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு - துங்கு இஸ்மாயிலின் ஆதரவுக்கு பாராட்டு

6 ஜோகூர் மாணவர்களுக்கு உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு - துங்கு இஸ்மாயிலின் ஆதரவுக்கு பாராட்டு