Jun 6, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துலக சட்டங்களை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு  - Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் மலேசியா கவலை
தற்போதைய செய்திகள்

அனைத்துலக சட்டங்களை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு - Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் மலேசியா கவலை

Share:

சிங்கப்பூர், மே.31-

உலகளவில் அனைத்துலகச் சட்டங்களை அமல்படுத்துவதில் இரட்டை நிலைப்பாடு அதிகரித்து வருவது குறித்து மலேசியா கவலை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் 23-வது Shangri-La பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின், அனைத்துலகச் சட்ட மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் வலிமை மற்றும் செல்வாக்கைப் பொறுத்து மாறுபடுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

வளரும் நாடுகள் ஒப்பந்தங்களை மீறினால் கடுமையான கண்டனங்களும் அழுத்தங்களும் எதிர்கொள்கின்றன. ஆனால் சக்திவாய்ந்த நாடுகளோ அல்லது அவற்றின் கூட்டாளிகளோ அதே செயலைச் செய்தால், உலகளாவிய எதிர்வினை மிகவும் மந்தமாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் புவிசார் அரசியல் போட்டிகளால் பலவீனமடைந்து வருவதாகவும், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் அனைத்துல சட்ட மீறல்கள் போன்ற விவகாரங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் மட்டுமே எதிர்வினைகள் வெளிப்படுவது உலகின் நம்பிக்கையை பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு