Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளியைத் தாக்கிய ஐவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கெமாமான், பிப்.26-

திரெங்கானு, கெமாமானின் உள்ள ஒரு சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவரை ஈவுயிரக்கமின்றி கண்மூடித்தனமாகத் தாக்கிய ஐந்து நபர்களுக்கு கெமாமான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

மேலும் ஒருவர், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த ஐவர், தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

கெமாமான் சந்தையில் மழை நேரத்தின் போது ஒரு சிறு அங்காடி கடையைத் தவறுதலாக மோதிவிட்டார் என்பதற்காக அந்த மாற்றுத் திறனாளியை அங்குள்ள சில நபர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சியை சித்திரிக்கும் காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த மாற்றுத் திறனாளியை மூன்று நான்கு பேர், தரையில் இழுத்துக் கொண்டு வந்தது மற்றும் அவரை கண்மூடித்தனமாகத் தாக்கிய செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு