May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பூச்சோங் ஆயுர்வேத வைத்தியரின் போலி டத்தோ ஶ்ரீ விருதுக்குரிய ஆவணங்கள், உடமைகள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஜன.24-

தம்மை மருத்துவர் என்றும், டத்தோஸ்ரீ அந்தஸ்துக்குரியவர் என்றும், கூறிக்கொண்டு, பூச்சோங்கில் ஆயுர் வேத மருத்துவச் சிகிச்சையை செய்து வந்த வைத்தியரின் வர்த்தகத் தளத்தில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் போலி டத்தோஸ்ரீ அந்தஸ்துக்குரிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. A.A. அன்பழகன் தெரிவித்தார்.

பண்டார் பூச்சோங்ஜெயாவில் உள்ள அந்த வைத்தியரின் வர்த்தகத் தளத்தில் சுபாங் ஜெயா மாநகர் மன்றமும், சுகாதார அமைச்சும் இந்த சோதனையில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முக்கிய ஆவணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் 54 வயதுடையை அந்த வைத்தியருக்கு சொந்தமான டத்தோஸ்ரீ என்று பெயர் பொறிக்கப்பட்ட சீருடைகள் மற்றும் பதாகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அன்பழகன் தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்படாத டத்தோஸ்ரீ அந்தஸ்துக்குரிய விருதை தமது பெயருக்கு முன்னாள் பதித்ததற்காக 2017 ஆம் ஆண்டு விருதளிப்பு குற்றவியல் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் இப்பொருட்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதற்காக அந்த நபருக்கு எதிராக விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டு இருப்பதையும் அன்பழகன் சுட்டிக்காட்டினார்.

Related News

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து