குடியுரிமை தொடர்பில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று இயற்றப்படுவதற்கான வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பில் ஆட்சியாளர்கள் மன்றத்தில் விளக்கம் அளித்தப் பின்னர் அமைச்சரவை அளவில் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சைஃபுதீன் நசுஷன் குறிப்பிட்டார்.
குடியுரிமை சட்டத்தில் உள்ள சில சிக்கல்கள் குறிப்பாக மொழியின் உள்ளார்ந்த அர்த்தத்தை சீர்செய்வது இந்த சட்டத்திருத்தத்தில் அடங்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நேற்று ஷா ஆலாமில் முடிவடைந்த பி.கே.ஆர் கட்சியின் ஆண்டு பேராளார் மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைஃபுதீன் நசுஷன் இதனை தெரிவித்தார்.








