Mar 14, 2026
Thisaigal NewsYouTube
லோரியின் அடியில் சிக்கி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது: ஆடவர் உடல் கருகி பலி
தற்போதைய செய்திகள்

லோரியின் அடியில் சிக்கி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது: ஆடவர் உடல் கருகி பலி

Share:

சிகாமட், ஜனவரி.04-

ஜொகூர், லாபிஸ், பெக்கான் தெனாங், ஜாலான் தெனாங் ஜெயாவில் நேற்று சனிக்கிழமை இரவு 7.15 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உடல் கருகி மாண்டார்.

இதில் லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.

லாரியின் அடியில் மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்ட போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென தீப்பிடித்தது. இத்தீ விபத்தில் லாரியின் முன் பகுதியும் மோட்டார் சைக்கிளும் முழுமையாகத் தீப்பற்றி எரிந்தன.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தீயின் கோரப் பிடியில் இருந்து தப்ப முடியாமல் லாரியின் அடியிலேயே உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லாபிஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், தீயை அணைத்து அந்த ஆடவரின் உடலை மீட்டனர்.

Related News

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி