பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கடந்த கால சரிவுகளையும், இன்றைய சாதனைகளையும் சித்தரிக்கும் “Anwar : The Untold Story” என்ற திரைப்படத்தைத் திரையிடுவதற்கு சில திரையரங்குகள் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு, ஏற்புடையது அல்ல என்று கூட்டரசு பிரதேச பெஜூவாங் கட்சியின் முன்னாள் தலைவர் கைருடீன் அபு ஹசான் தெரிவித்தார்.
உண்மையிலேயே அன்வாரின் திரைப்படைத்தை திரையிட மறுப்பு தெரிவித்து கீழறுப்பு செய்வதற்கு எந்தவொரு திரையரங்கிற்கும் துணிவு இல்லையென்று கைருடீன் குறிப்பிட்டார்.
Anwar : The Untold Story திரைப்படத்தைத் தயாரித்த குழுவினர், கூறியுள்ள குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. பிரதமராக இருக்கக்கூடிய ஒருவரின் திரைப்படைத்தை எந்தவொரு திரையரங்கும் புறக்கணிக்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


