பகாங் மாநிலத்தில் இவ்வாண்டில், இதுவரை நீரில் மூழ்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஆறுகள், அருவிகள் மற்றும் கடற்கரைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாடு மற்றும் மீட்புப் பிரிவு துணை இயக்குநர் முஹமட் சலாஹுடின் இசா, ஆபத்தான பகுதிகளில் நீந்துவதைத் தவிர்ப்பதுடன், எச்சரிக்கை பலகைகளையும் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக அருவிகள், நீர்வீழ்ச்சிப் பகுதிகள் மற்றும் ஆறுகளில் ஏற்படும் திடீர் ‘நீர் பெருக்கு’ குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு கொடி அல்லது ‘நீந்தக்கூடாது’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒருபோதும் நீந்த வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








