மெகா ஐலிண்டுங்யு திருவிழா வரும் செப்டம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை கோத்தா டமன்சாராவில் உள்ள ஸ்ராண்ட் பேரங்காடியில் நடைபெறுகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ராமணன் ராமகிருஷ்ணன் இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் புதிய சின்னத்தையும் அறிமுகப்படுத்த உள்ளார்.
சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ ஏற்பாடு செய்யும் இவ்விழாவில், 60 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கெசுமா பெர்சாமா ரக்யாட் என்ற திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெறலாம்.
மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு உள்ளிட்ட மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மித்ரா, எச்ஆர்டி கோர்ப், தெலண்ட்கோர்ப், நியோஷ் உள்ளிட்ட11 அமைப்புகள் இதில் பங்கேற்கின்றன.
மேலும், வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்காக 25 நிறுவனங்களுடன் வேலை வாய்ப்பு முகாமும் நடத்தப்படுகின்றது.
இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுடன், இலவச சுகாதாரப் பரிசோதனை, பங்களிப்பு விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
அதேவேளையில், உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், குடும்பத்தினருக்கான போட்டிகள், பிரபலங்களுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.








