May 6, 2026
Thisaigal NewsYouTube
தந்தை நஜீப்பிடம் மன்னிப்புக் கோரினார் மகள் நூர்யானா
தற்போதைய செய்திகள்

தந்தை நஜீப்பிடம் மன்னிப்புக் கோரினார் மகள் நூர்யானா

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.22-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் எஞ்சியிருக்கும் சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பில் நஜீப்பின் மகள் நூர்யானா நஜ்வா தனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, வீட்டுக் காவல் அனுமதியைப் பெற்றுத் தர முடியாததற்காகத் தனது தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக நூர்யானா தெரிவித்தார்.

"உங்களுடைய தற்போதைய உணர்வுகளை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. தயவு செய்து மன உறுதியுடன் இருங்கள் அப்பா. வழக்கம் போல நாம் நமது போராட்டத்தைத் தொடருவோம்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நூர்யானா பதிவிட்டுள்ளார்.

இத்தருணத்தில் தமது தந்தை உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதே மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்