ந்வரி ஏய்ப்பு செய்து, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான வெள்ளியை முதலீடு செய்துள்ள மலேசிய தலைவர்கள் குறித்து அம்பலப்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்கள் தொடர்பில் ஆள்பார்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டை அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இன்று மறுத்துள்ளார்.
எஸ்.பி.ஆர்.எம். மிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்று அஸாம் பாக்கி விளக்கினார். எஸ்.பி.ஆர்.எம் ஒரு சுதந்திரமான அமைப்பு. சில தலைவர்களின் பெயர்கள், பண்டோரோ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டாலும் விசாரணை நடத்துவதற்கு முன்னதாக, சில ஆதராங்களைத் திரட்ட வேண்டியுள்ளது என்று அஸாம் பாக்கி விளக்கம் அளித்துள்ளார்.
அம்னோ தலைவரும், துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் ஹமிடி, அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சருமான தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் ஆகியோரின் பெயர்கள் பண்டோரா ஆவணங்களில் இடம் பெற்றுள்ள போதிலும், அவர்களை எஸ்.பி.ஆர்.எம், விசாரணைக்கு அழைக்காதது ஏன் என்று அரசியல் பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரன்ஸ் கோம்ஸ் எழுப்பிய கேள்வித் தொடர்பில் அஸாம் பாக்கி எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


