Jan 24, 2026
Thisaigal NewsYouTube
பேராக் மாநிலத்தில் மார்ச் 1 முதல் நெகிழிப் பைகளுக்குத் தடை
தற்போதைய செய்திகள்

பேராக் மாநிலத்தில் மார்ச் 1 முதல் நெகிழிப் பைகளுக்குத் தடை

Share:

ஈப்போ, ஜனவரி.24-

பேராக் மாநிலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளுக்கான தடை வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநிலச் சுற்றுசூழல் குழு ஆட்சிக் குழு உறுப்பினர் தே கோக் லிம் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற 'MS Plastics' நிலைத்தன்மை மையத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தடையின் கீழ் வணிக நிறுவனங்கள் நெகிழிப் பைகளை 20 காசுகளுக்கு விற்பனை செய்ய இனி அனுமதி இல்லை என்றும், தடையை மீறுபவர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

வணிகர்கள் பைகளை விற்க விரும்பினால், அவை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நெகிழிப் பைகளுக்கு வசூலிக்கப்பட்ட 20 காசு கட்டணம் என்பது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தவிர, பணம் திரட்டுவதற்காக அல்ல. பேரங்காடிகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இம்மாற்றத்திற்குத் தயாராக உள்ளன. இருப்பினும், நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்த பயனீட்டாளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவது மிகவும் அவசியமாகும் என்று தே கோக் லிம் வலியுறுத்தினார்.

Related News

6 வயதில் முதலாம் ஆண்டு: கல்வித் தரத்தை உலக அளவிற்கு உயர்த்தவே இந்த நடவடிக்கை - பிரதமர் அன்வார் விளக்கம்

6 வயதில் முதலாம் ஆண்டு: கல்வித் தரத்தை உலக அளவிற்கு உயர்த்தவே இந்த நடவடிக்கை - பிரதமர் அன்வார் விளக்கம்

சூரியா கேஎல்சிசி-யில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்: பாரம்பரியம், கலை மற்றும் சமூக முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம்

சூரியா கேஎல்சிசி-யில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்: பாரம்பரியம், கலை மற்றும் சமூக முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம்

மரம் விழுந்து இரண்டு வாகனங்கள் சேதம்

மரம் விழுந்து இரண்டு வாகனங்கள் சேதம்

தனிநபர் தரவுகளை இணையத்தில் பகிர வேண்டாம்: ஐஜிபி எச்சரிக்கை

தனிநபர் தரவுகளை இணையத்தில் பகிர வேண்டாம்: ஐஜிபி எச்சரிக்கை

அரசியல் உறுதித்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகத்தால் ஆசியாவிலேயே சிறந்த நிலையை எட்டியுள்ளது ரிங்கிட் – அன்வார்

அரசியல் உறுதித்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகத்தால் ஆசியாவிலேயே சிறந்த நிலையை எட்டியுள்ளது ரிங்கிட் – அன்வார்

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை