May 6, 2026
Thisaigal NewsYouTube
பேராக் மாநிலத்தில் மார்ச் 1 முதல் நெகிழிப் பைகளுக்குத் தடை
தற்போதைய செய்திகள்

பேராக் மாநிலத்தில் மார்ச் 1 முதல் நெகிழிப் பைகளுக்குத் தடை

Share:

ஈப்போ, ஜனவரி.24-

பேராக் மாநிலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளுக்கான தடை வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநிலச் சுற்றுசூழல் குழு ஆட்சிக் குழு உறுப்பினர் தே கோக் லிம் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற 'MS Plastics' நிலைத்தன்மை மையத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தடையின் கீழ் வணிக நிறுவனங்கள் நெகிழிப் பைகளை 20 காசுகளுக்கு விற்பனை செய்ய இனி அனுமதி இல்லை என்றும், தடையை மீறுபவர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

வணிகர்கள் பைகளை விற்க விரும்பினால், அவை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நெகிழிப் பைகளுக்கு வசூலிக்கப்பட்ட 20 காசு கட்டணம் என்பது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தவிர, பணம் திரட்டுவதற்காக அல்ல. பேரங்காடிகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இம்மாற்றத்திற்குத் தயாராக உள்ளன. இருப்பினும், நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்த பயனீட்டாளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவது மிகவும் அவசியமாகும் என்று தே கோக் லிம் வலியுறுத்தினார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

பேராக் மாநிலத்தில் மார்ச் 1 முதல் நெகிழிப் பைகளுக்குத் தடை | Thisaigal News