கோலாலம்பூர், செராஸ், பன்டார் துன் ரசாக்க்கில் ஓர் அடுக்குமாடி வீட்டில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் ஆறு வயது சிறுமி உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் கோலாலம்பூர், துன்கு அசிசா மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமி சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.
அந்த சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதற்கு அடையாளமாக உடல் ரணமாக இருப்பது தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








