Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஜேபிஜே சம்மன்களுக்கு ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாக தீர்வு காணவில்லை என்றார் கருப்புப்பட்டியலில் வாகன உரிமையாளர்கள்
தற்போதைய செய்திகள்

ஜேபிஜே சம்மன்களுக்கு ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாக தீர்வு காணவில்லை என்றார் கருப்புப்பட்டியலில் வாகன உரிமையாளர்கள்

Share:

புத்ராஜெயா, நவம்பர்.06-

சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே சம்மன்களுக்கு வரும் ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாக தீர்வு காணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தீர்வு காணத் தவறும் வாகனமோட்டிகள், ஜனவரி முதல் தேதியிலிருந்து கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நினைவுறுத்தினார்.

சாலை போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்த வாகனமோட்டிகள் ஜேபிஜே-வின் சம்மன்களுக்கு விரைந்து தீர்வு காணுமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.

நாடு முழுவதும் ஜேபிஜே- வின் 5.5 மில்லியன் சம்மன்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளன. சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள் வரும் ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாக அவற்றுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். அவர்களின் பெயர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.

இவ்வாறு கருப்புப் பட்டியலில் இடம் பெறும் வாகனமோட்டிகள் தொடர்ந்து வாகனத்தைப் பயன்படுத்துதற்கு தடை விதிக்கப்படும் என்பதுடன் அவர்களின் வாகனமோட்டும் லைசென்ஸ் புதுப்பிக்கப்படாது என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

Related News

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்