Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

Share:

கடுமையான விசா கட்டுப்பாடுகள் காரணமாக, வங்காள தேசத்தைச் சேர்ந்த நோயாளிகள், இந்தியாவிற்கு சிகிச்சைக்காக செல்ல முடியாத நிலையில், அவர்களை மலேசியாவிற்கு மருத்துவ சுற்றுலாப் பயணிகளாக அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2026-ஆம் ஆண்டிற்கான, “மலேசிய மருத்துவ சுற்றுலா” முயற்சியின் கீழ், மலேசியாவை உலகளாவிய மருத்துவ சுற்றுலா மையமாக உருவாக்கும் நோக்கில், மலேசியா, வங்காள தேசத்துடனான தொடர்புகளை வலுப்படுத்தி வருகின்றது.

பல ஆண்டுகளாக, வங்காள தேச நோயாளிகள், அருகாமை நாடு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பரிந்துரை அமைப்புகள் காரணமாக, சிகிச்சைக்காக இந்தியாவை முதன்மையாகத் தேர்வு செய்து வந்தனர்.

ஆனால், சமீபத்தில் விசா விதிமுறைகள் கடுமையடைந்ததால், பல நோயாளிகளும் மருத்துவ ஒருங்கிணைப்பாளர்களும் மாற்று நாடுகளை ஆராயத் தொடங்கியுள்ளனர் என்று மலேசிய சுகாதாரப் பயண மன்றமான MHTC தெரிவித்துள்ளது.

அதன் படி, வங்காள தேச நோயாளிகளுக்கு மலேசியாவில் சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

Related News

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

யு மொபைல் நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம்

யு மொபைல் நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம்