கிளந்தான் மாநிலம், பண்டார் பாரு தானா மேரா பகுதியிலுள்ள, ஜாலான் மாச்சாங்-பண்டார் பாரு தானா மேரா சாலையில், இன்று அதிகாலை இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் 64 வயதான பெண்ணும், 14 வயது சிறுமியும் பலியானதாக, தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டுப் பிரிவு மூத்த தலைவர் ஹம்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அதிகாலை 4.35 மணியளவில், அவசர அழைப்பு கிடைத்த நிலையில், சம்பவ இடத்தை அடைந்த போது, பெரோடுவா மைவியும், BMW 5 இரக காரும் விபத்திற்குள்ளாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பெரோடுவா மைவியில் பயணம் செய்த இரு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், மற்றவர்கள் உயிர் தப்பினர் என்றும் ஹம்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.








