May 28, 2026
Thisaigal NewsYouTube
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலை இடம் மாற்றம் செய்வதற்கு ஆலய நிர்வாகம் இணக்கம்
தற்போதைய செய்திகள்

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலை இடம் மாற்றம் செய்வதற்கு ஆலய நிர்வாகம் இணக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.25-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் 130 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை புதிய இடத்திற்கு இடம் மாற்றுவதற்கு ஆலய நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அருகாமையிலேயே வழங்கப்பட்ட ஒரு புதிய நிலத்தில் ஆலயம் இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு ஆலய நிர்வாகம் உடன்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கார்த்திக் குணசீலன் தெரிவித்தார்.

ஆலய நிர்வாகத்திற்கும், கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது கோவிலை புதிய இடத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்கு தாங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கார்த்திக் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வார காலமாக நீடித்து வந்த தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்திய அமைச்சருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும், கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் ஆலயம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கார்த்திக் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிலத்தில் அனுமதியின்றி கோவில் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அ ன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்து இருந்தார்.

எனவே அந்த கோவிலை அங்கிருந்து இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரம் சட்டரீதியாகக் கையாளப்பட வேண்டும் என்றும் பிரதமர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

அதே வேளையில் அந்த நிலத்தில் மடானி பள்ளிவாசலை நிறுவுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டதைத் போல நாளை மறுநாள் மார்ச் 27 ஆம் தேதி வியாழக்கிழமை தமது தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது