ஜன.12-
ஜோகூர், Batu Pahat, Sri Medan பகுதியில் மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், மக்கள் நீண்ட காலமாக தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட வெள்ளம் கடந்த 30 ஆண்டுகளில் மிக மோசமானதாக கருதப்படுகிறது. மோசமான வடிகால் அமைப்பே இந்த வெள்ளப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக நிவாரண மையங்களில் நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், அவர்களின் அன்றாட வாழ்க்கையும் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில வணிகங்கள் கூட மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பயிர்களும் சொத்துக்களும் சேதமடைந்து மக்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
வெள்ளப் பிரச்சனையைத் தீர்க்க குறுகிய , நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக நீரை வெளியேற்ற நீர் இறைக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. வடிகால் அமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால தீர்வாக, மத்திய அரசு வெள்ள நிவாரண திட்டங்களுக்கு RM1.6 பில்லியன் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







