Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது நாளாக கோலாலம்பூர் - சென்னை விமானச் ​சேவை ரத்து
தற்போதைய செய்திகள்

இரண்டாவது நாளாக கோலாலம்பூர் - சென்னை விமானச் ​சேவை ரத்து

Share:

இன்று டிசம்பர் 5 ஆம் தேதி இரண்டாவது நாளாக மலேசிய ஏர்லைன்ஸும், IndiGo வும் கோலாலம்பூர் - செ​ன்னைக்கான தனது காலை ​விமானச் சேவையை ரத்து செய்துள்ள வேளையில் ஏர் ஆசியா விமானம் 6 மணி நேர தாமதத்​திற்கு பிறகு கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புறப்பட அட்டவணையிட்டுள்ளது.

மிச்சவுங் புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ​சூறைக்காற்றுடன் நேற்று பெய்த கனமழையினால் சென்னை விமான நிலைத்தில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் ​விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் ​சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் வடியவில்லை. மேலும் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையம் இன்று காலை 9 மணி வரை மூடப்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.10 மணிக்கு கோலாலம்பூரிருந்து சென்னை புறப்பட வேண்டிய மலேசிய ஏர்லைன்ஸின் MH 182 விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று இன்று காலை 6.05 மணிக்கு கோலாலம்பூரிருந்து சென்னை புறப்பட வேண்டிய IndiGo விமான நிறுவனத்திற்கு சொந்தமான 6E 1032 விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் ஆசியாவின் AK 11 விமானம், 6 மணி நேர தாமதத்திற்கு பின்னர் மதியம் 12 மணிக்கு புறப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது. எனினும் விமானப் புறப்பாடு உறு​தி செய்யப்படவில்லை.

இன்றிரவு கோலாலம்பூரிலிருந்து ​சென்னைக்கு புறப்படவிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், ஏர் ஆ​சியா விமானம், Batik AIR ( பாத்தேக் ஏர் ) திட்டமிட​ப்பட்டபடி புறப்படுவதற்கு அ​​ட்டவணையிடப்பட்டுள்ளன. ஆனால், இறுதி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்பதால் பயணிகள் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு