May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரை மடக்கு கத்தியை பயன்படுத்தி கொலை செய்ய முயற்சித்தாக மெக்கானிக் ஒருவர் குற்றச்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவரை மடக்கு கத்தியை பயன்படுத்தி கொலை செய்ய முயற்சித்தாக மெக்கானிக் ஒருவர் குற்றச்சாட்டப்பட்டார்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன் 21-

தனது முன்னாள் மனைவியின் வாழ்க்கை துணைவராக வருகின்றவர் என்று நம்பப்படும் ஆடவரை மடக்கு கத்தியை பயன்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததாக மெக்கானிக் ஒருவர் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

33 வயது முஹம்மது ஹாபிஸி புர்ஹான் என்ற அந்த மெக்கானிக் நீதிபதி ஓய் ஷீவ் யேன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 307 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 10 ஆம் தேதி அதிகாலை 5.50 மணியளவில் ஜார்ஜ்டவுன், ஜாலான் புக்கிட் கம்பீர், தாமான் ஜேட் வியூ -வில் உள்ள ஒன்பதாவது மாடியின் நடைபாதையில் இக்குற்றத்தை புரிந்ததாக அந்த மெக்கானிக் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News